Sunday, September 22, 2013

நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள்?

         பரங்கிப்பேட்டையில் வெளியிடப்பட்ட அழைப்புப்பணி நோட்டிஸ்
                          
                    நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள்?

  • 1) அல்லாஹ்வை மட்டும் நம்பி நேசித்து வாழும் அணியிலா..?
  • 2) அல்லாஹ்வைப் போல பிறறையும் நேசித்து வாழும் அணியிலா..?

இந்த வசனத்தைப் படியுங்கள்.

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்;. ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்;. அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).  (2:165)
  • 1) அல்லாஹ்வின் பாதுகாப்பு போதும் என்கிற அணியிலா?
  • 2) அல்லாஹ்வின் அடியார்களின் பாதுகாப்பும் வேண்டும் என்கிற அணியிலா?
இந்த வசனத்தைப் படியுங்கள் - சிந்தியுங்கள்

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.  (அல்குர்ஆன் 18:102)
  • 1) அல்லாஹ்வை மட்டும் அழைத்தால் போதும் என்கிற அணியிலா?
  • 2) அல்லாஹ்வையும் அழைக்கலாம், அப்துல்காதர் ஜிலானியையும் அழைக்கலாம். தர்காக்களில் அடங்கி இருப்பவர்களையும் அழைக்கலாம் என்கிற அணியிலா?
இந்த வசனத்தை படித்து சிந்தியுங்கள்.
அவைனயன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. தெரிவிக்க அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். (7:197,198)
  • 1) மரணமே இல்லாத அல்லாஹ்வை மட்டும் நம்பும் அணியிலா..?
  • 2) பிறந்து மரணித்தவர்களையும் சேர்த்து அழைக்கும் அணியிலா..?
இந்த வசனத்தைப் படித்து சிந்தியுங்கள்.

அல்லாஹ்யன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள்.  அவர்களே படைக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் இறந்தவர்கள் உயிரோடு இல்லை. எப்போது மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்பதையும் அறிய மாட்டார்கள். (16:20,21)

மறுமை நாள் வரை பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைக்கிறார்களே அவர்களை விட வழிகேடர்கள் யார்? தம்மை அழைப்பதை அறியாதவர்களாக அவர்கள் உள்ளனர். மக்களை ஒன்று திரட்டும் நாளில் இவர்களுக்கு அவர்கள் பகைவர்களாவார்கள் (46:6)

  • 1) அல்லாஹ்வை மட்டும் பாதுகாவலனாக எடுத்துக் கொள்ளும் அணியில் இருக்கிறீர்களா..?
  • 2) அல்லாஹ்வோடு வேறு (அவ்லியாக்களும்) பாதுகாவலர்களும் இருக்கிறார்கள் என்ற அணியில் இருக்கிறீர்களா.?
இந்த வசனத்தைப் படித்து சிந்தியுங்கள்.

 அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).(29:41)
  • 1) அல்லாஹ்வின் இந்த சலாலைக் கண்டு அஞ்சும் அணியில் நீங்கள் இருக்கிறீர்களா...?
  • 2) அல்லாஹ்வின் சவாலை ஏற்று தோல்வியுறும் அணியில் இருக்கிறீர்களா...?
இந்த வசனத்தைப் படித்து சிந்தியுங்கள்.

 நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7:194)

பரங்கிப்பேட்டையில் ஷிர்க் என்ற இந்த இணைவைப்பை வளர்க்க மீண்டும் சிலர் முயற்சித்து வருகின்றனர்.  தர்காக்களை கட்டி - அலங்கரித்து மக்களை அழைக்க பாடுபடுகின்றனர்.

மரணித்துப் போன யாருக்கும் எந்த சக்தியுமில்லை என்று மேற்கண்ட வசனங்கள் உண்மையை முன் வைக்கின்றன.  அல்லாஹ்வின் வசனங்களை நம்பும் மக்களாக நாம் இருந்தால் இத்தகைய தர்கா - மெளலீது வழிபாடுகளை அடியோடு துடைத்தெரிய பாடுபட வேண்டும்.

இணை வைத்தலின் சாயல்கள் நம்மிடம் இருக்கும் போது நம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வதில் அல்லாஹ்விடம் எந்த பலனும் கிடைக்காது.

இணை வைக்கும் நிலையிலேயே பலர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக்  கொள்கிறார்கள் என்று இறைவன் (12:106) வசனத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

இது ஈமானுக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதியாகும்.

இந்த வசனத்தை படித்து சிந்தியுங்கள்.

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.(6:82)

தர்காக்களை, தாயத்துகளை, மந்திரித்தளை, மடடைகளை முற்றிலுமாக ஒதுக்கி,  இவற்றை மார்க்கம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களை புறக்கணித்து மக்களுக்கு இனங்காட்டி இஸ்லாத்தை நிலைநாட்டுவோம்.








நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள்?

         பரங்கிப்பேட்டையில் வெளியிடப்பட்ட அழைப்புப்பணி நோட்டிஸ்
                          
                    நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள்?

  • 1) அல்லாஹ்வை மட்டும் நம்பி நேசித்து வாழும் அணியிலா..?
  • 2) அல்லாஹ்வைப் போல பிறறையும் நேசித்து வாழும் அணியிலா..?

இந்த வசனத்தைப் படியுங்கள்.

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்;. ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்;. அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).  (2:165)
  • 1) அல்லாஹ்வின் பாதுகாப்பு போதும் என்கிற அணியிலா?
  • 2) அல்லாஹ்வின் அடியார்களின் பாதுகாப்பும் வேண்டும் என்கிற அணியிலா?
இந்த வசனத்தைப் படியுங்கள் - சிந்தியுங்கள்

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.  (அல்குர்ஆன் 18:102)
  • 1) அல்லாஹ்வை மட்டும் அழைத்தால் போதும் என்கிற அணியிலா?
  • 2) அல்லாஹ்வையும் அழைக்கலாம், அப்துல்காதர் ஜிலானியையும் அழைக்கலாம். தர்காக்களில் அடங்கி இருப்பவர்களையும் அழைக்கலாம் என்கிற அணியிலா?
இந்த வசனத்தை படித்து சிந்தியுங்கள்.
அவைனயன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. தெரிவிக்க அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். (7:197,198)
  • 1) மரணமே இல்லாத அல்லாஹ்வை மட்டும் நம்பும் அணியிலா..?
  • 2) பிறந்து மரணித்தவர்களையும் சேர்த்து அழைக்கும் அணியிலா..?
இந்த வசனத்தைப் படித்து சிந்தியுங்கள்.

அல்லாஹ்யன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள்.  அவர்களே படைக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் இறந்தவர்கள் உயிரோடு இல்லை. எப்போது மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்பதையும் அறிய மாட்டார்கள். (16:20,21)

மறுமை நாள் வரை பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைக்கிறார்களே அவர்களை விட வழிகேடர்கள் யார்? தம்மை அழைப்பதை அறியாதவர்களாக அவர்கள் உள்ளனர். மக்களை ஒன்று திரட்டும் நாளில் இவர்களுக்கு அவர்கள் பகைவர்களாவார்கள் (46:6)

  • 1) அல்லாஹ்வை மட்டும் பாதுகாவலனாக எடுத்துக் கொள்ளும் அணியில் இருக்கிறீர்களா..?
  • 2) அல்லாஹ்வோடு வேறு (அவ்லியாக்களும்) பாதுகாவலர்களும் இருக்கிறார்கள் என்ற அணியில் இருக்கிறீர்களா.?
இந்த வசனத்தைப் படித்து சிந்தியுங்கள்.

 அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).(29:41)
  • 1) அல்லாஹ்வின் இந்த சலாலைக் கண்டு அஞ்சும் அணியில் நீங்கள் இருக்கிறீர்களா...?
  • 2) அல்லாஹ்வின் சவாலை ஏற்று தோல்வியுறும் அணியில் இருக்கிறீர்களா...?
இந்த வசனத்தைப் படித்து சிந்தியுங்கள்.

 நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7:194)

பரங்கிப்பேட்டையில் ஷிர்க் என்ற இந்த இணைவைப்பை வளர்க்க மீண்டும் சிலர் முயற்சித்து வருகின்றனர்.  தர்காக்களை கட்டி - அலங்கரித்து மக்களை அழைக்க பாடுபடுகின்றனர்.

மரணித்துப் போன யாருக்கும் எந்த சக்தியுமில்லை என்று மேற்கண்ட வசனங்கள் உண்மையை முன் வைக்கின்றன.  அல்லாஹ்வின் வசனங்களை நம்பும் மக்களாக நாம் இருந்தால் இத்தகைய தர்கா - மெளலீது வழிபாடுகளை அடியோடு துடைத்தெரிய பாடுபட வேண்டும்.

இணை வைத்தலின் சாயல்கள் நம்மிடம் இருக்கும் போது நம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வதில் அல்லாஹ்விடம் எந்த பலனும் கிடைக்காது.

இணை வைக்கும் நிலையிலேயே பலர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக்  கொள்கிறார்கள் என்று இறைவன் (12:106) வசனத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

இது ஈமானுக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதியாகும்.

இந்த வசனத்தை படித்து சிந்தியுங்கள்.

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.(6:82)

தர்காக்களை, தாயத்துகளை, மந்திரித்தளை, மடடைகளை முற்றிலுமாக ஒதுக்கி,  இவற்றை மார்க்கம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களை புறக்கணித்து மக்களுக்கு இனங்காட்டி இஸ்லாத்தை நிலைநாட்டுவோம்.








Monday, September 9, 2013

"அல்லாஹு அக்பர்" ஷாம் - சிரியாவின் இன்றைய நிலை

சிரியா, ஷாம்தேசத்தின்  இன்றைய நிலை  வீடியோ பதிவுகள்
 "அல்லாஹு அக்பர்"

"அல்லாஹு அக்பர்" ஷாம் - சிரியாவின் இன்றைய நிலை

சிரியா, ஷாம்தேசத்தின்  இன்றைய நிலை  வீடியோ பதிவுகள்
 "அல்லாஹு அக்பர்"

Wednesday, August 14, 2013

தலை முக்காடு தடையில்லை இனி..


ஸலாம்.

இந்திய அரசுப் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் தலை முக்காடுடன் படிப்பதற்கு எவ்விதத் தடையும் இந்திய அரசியல் சாசன சட்டத்திலோ, கல்வித் துறை வழிகாட்டலிலோ இல்லை என்ற போதும் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பல ஊர்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் விரும்பி தலை முக்காடு அணிந்தால் பள்ளி நிர்வாகம் அதை தடுத்தும், கண்டித்தும் மாணவிகளை மன உளைச்சளுக்கு ஆளாக்கி வந்துக் கொண்டிருக்கின்றது. 


அப்படிப்பட்ட ஊர்களில் பரங்கிப்பேட்டையும் ஒன்று. கடந்த பல ஆண்டுகளாக இந்த அவலம் நீடித்தாலும் முறையாக இதை எதிர்கொண்டு நம் உரிமையை நிலை நாட்டும் வாய்ப்பை நம் சமுதாயம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

முந்தைய ஊரின் பொது ஜமாஅத்துகள் இது குறித்து சொன்னத் தகவலில் "முஸ்லிம் மாணவிகளே - தங்களுக்கு தலை முக்காடு போட விருப்பமில்லை - என்று எழுதி கொடுத்துள்ளார்கள், நாம் என்ன செய்வது..?" என்ற செய்தியே கிடைத்தது.

மாணவிகள் ஒரு தவறான முடிவெடுத்தால் அதை மாணவிகளிடம் சுட்டிக் காட்டி அவர்களை வென்றெடுப்பதற்கு பதில், தவறான புரிதலையே பொது சட்டமாக்கி மக்கள் முன் வைத்த அவலம் நெஞ்சை சுட்டது.

ஆனாலும் இது குறித்து கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து முஸ்லிம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடந்து வந்தன.  சமூக மாற்றங்களுக்கு மிக முக்கிய பங்காற்ற வேண்டிய ஜும்ஆ மேடைகளின் மூலம் இது வீரியமடைந்தது. பொது குழுமங்களில் விவாதிக்கப்பட்டது.

துணிச்சலுடன் தலை முக்காடு போட்டுக் கொள்ளும் மாணவிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் உடனுக்குடன் தலையிட்டு இந்திய குடி மக்களுக்கு இந்திய அரசு வழங்கி இருக்கக் கூடிய உரிமைகள் சுட்டிக் காட்டப்பட்டு வந்தன.

கல்வித்துறை மாவட்ட அதிகாரிகளை சந்தித்து முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சளுக்கு உணர்வு ரீதியான தீர்வு வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

மிக நீண்ட போராட்டம், கோரிக்கை, வாத பிரதிவாதங்களுக்கு பிறகு இந்த கல்வியாண்டில் நமதூர் அரசு பெண்கள் பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் தலை முக்காடு போட்டுக் கொள்ள அனுமதி கிடைத்ததையும் நம் மாணவிகள் தற்போது தலை முக்காட்டுடன் பள்ளியில் படிப்பதையும் நாம் அறிவோம்.

இதை மெருகூட்டி இனி வரும் காலங்களில் மாணவிகள் தொடர்ந்து தலை முக்காடு அணிந்து பள்ளியில் படிக்கும் சூழ்நிலையை நாம் கவனத்துடன் உருவாக்க வேண்டும்.  இன்றைக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எந்த அளவிற்கு முக்கியமானதோ அதே போன்று காலாகாலத்திற்கும் இதை தக்கவைப்பதும் முக்கியமாகும்.

நூற்றுக்கணக்கான மாணவிகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.  வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கலாம்.  எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் தலை முக்காடு அணிவதன் அவசியத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் அதை கழற்றத் தேவையில்லை என்ற அறிவையும் ஏற்படுத்த வேண்டும். 

தலை முக்காட்டை ஒரு சடங்காக பார்க்காமல் அதை ஒரு இஸ்லாமிய பண்பாட்டு அடையாளமாகவும், பெண்கள் அணியும் உடைகளில் அதற்கும் முக்கியப் பங்குண்டு என்பதையும் நம் மாணவிகளின் உள்ளத்தில் அழுத்தமாக பதிய வைக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பரங்கிப்பேட்டையின் அனைத்து முஸ்லிம் வீடுகளுக்கும் இந்த செய்தி எட்டியுள்ளதா.. என்று நமக்கு தெரியவில்லை.   எனவே சமுதாய அமைப்புகள் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு ஒவ்வொரு வீட்டிலும் கொடுத்து வந்தால் பலனளிக்கும்.

அல்லாஹ் நமக்களித்துள்ள மிகப் பெரிய மீடியாவான ஜும்ஆ மேடைகளில் அவ்வப்போது இதை நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

தலை முக்காட்டிற்கெதிராக பள்ளியில் மாணவிகள் ஏதும் பிரச்சனையை சந்தித்தால் அதை அலட்சியப்படுத்தாமல் பெற்றோர்கள், அல்லது பொறுப்புதாரிகள் உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

நமது அலட்சியப்போக்கே ஏராளமான உரிமைகளை இழந்து நிற்பதற்கு முக்கியக் காரணம் என்பதை முஸ்லிம்கள் அறிவார்ந்து சிந்தித்து உணர வேண்டும். இது நடந்தால் உரிமைகளை வென்றெடுக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

தலை முக்காடு தடையில்லை இனி..


ஸலாம்.

இந்திய அரசுப் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் தலை முக்காடுடன் படிப்பதற்கு எவ்விதத் தடையும் இந்திய அரசியல் சாசன சட்டத்திலோ, கல்வித் துறை வழிகாட்டலிலோ இல்லை என்ற போதும் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பல ஊர்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் விரும்பி தலை முக்காடு அணிந்தால் பள்ளி நிர்வாகம் அதை தடுத்தும், கண்டித்தும் மாணவிகளை மன உளைச்சளுக்கு ஆளாக்கி வந்துக் கொண்டிருக்கின்றது. 


அப்படிப்பட்ட ஊர்களில் பரங்கிப்பேட்டையும் ஒன்று. கடந்த பல ஆண்டுகளாக இந்த அவலம் நீடித்தாலும் முறையாக இதை எதிர்கொண்டு நம் உரிமையை நிலை நாட்டும் வாய்ப்பை நம் சமுதாயம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

முந்தைய ஊரின் பொது ஜமாஅத்துகள் இது குறித்து சொன்னத் தகவலில் "முஸ்லிம் மாணவிகளே - தங்களுக்கு தலை முக்காடு போட விருப்பமில்லை - என்று எழுதி கொடுத்துள்ளார்கள், நாம் என்ன செய்வது..?" என்ற செய்தியே கிடைத்தது.

மாணவிகள் ஒரு தவறான முடிவெடுத்தால் அதை மாணவிகளிடம் சுட்டிக் காட்டி அவர்களை வென்றெடுப்பதற்கு பதில், தவறான புரிதலையே பொது சட்டமாக்கி மக்கள் முன் வைத்த அவலம் நெஞ்சை சுட்டது.

ஆனாலும் இது குறித்து கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து முஸ்லிம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடந்து வந்தன.  சமூக மாற்றங்களுக்கு மிக முக்கிய பங்காற்ற வேண்டிய ஜும்ஆ மேடைகளின் மூலம் இது வீரியமடைந்தது. பொது குழுமங்களில் விவாதிக்கப்பட்டது.

துணிச்சலுடன் தலை முக்காடு போட்டுக் கொள்ளும் மாணவிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் உடனுக்குடன் தலையிட்டு இந்திய குடி மக்களுக்கு இந்திய அரசு வழங்கி இருக்கக் கூடிய உரிமைகள் சுட்டிக் காட்டப்பட்டு வந்தன.

கல்வித்துறை மாவட்ட அதிகாரிகளை சந்தித்து முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சளுக்கு உணர்வு ரீதியான தீர்வு வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

மிக நீண்ட போராட்டம், கோரிக்கை, வாத பிரதிவாதங்களுக்கு பிறகு இந்த கல்வியாண்டில் நமதூர் அரசு பெண்கள் பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் தலை முக்காடு போட்டுக் கொள்ள அனுமதி கிடைத்ததையும் நம் மாணவிகள் தற்போது தலை முக்காட்டுடன் பள்ளியில் படிப்பதையும் நாம் அறிவோம்.

இதை மெருகூட்டி இனி வரும் காலங்களில் மாணவிகள் தொடர்ந்து தலை முக்காடு அணிந்து பள்ளியில் படிக்கும் சூழ்நிலையை நாம் கவனத்துடன் உருவாக்க வேண்டும்.  இன்றைக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எந்த அளவிற்கு முக்கியமானதோ அதே போன்று காலாகாலத்திற்கும் இதை தக்கவைப்பதும் முக்கியமாகும்.

நூற்றுக்கணக்கான மாணவிகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.  வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கலாம்.  எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் தலை முக்காடு அணிவதன் அவசியத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் அதை கழற்றத் தேவையில்லை என்ற அறிவையும் ஏற்படுத்த வேண்டும். 

தலை முக்காட்டை ஒரு சடங்காக பார்க்காமல் அதை ஒரு இஸ்லாமிய பண்பாட்டு அடையாளமாகவும், பெண்கள் அணியும் உடைகளில் அதற்கும் முக்கியப் பங்குண்டு என்பதையும் நம் மாணவிகளின் உள்ளத்தில் அழுத்தமாக பதிய வைக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பரங்கிப்பேட்டையின் அனைத்து முஸ்லிம் வீடுகளுக்கும் இந்த செய்தி எட்டியுள்ளதா.. என்று நமக்கு தெரியவில்லை.   எனவே சமுதாய அமைப்புகள் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு ஒவ்வொரு வீட்டிலும் கொடுத்து வந்தால் பலனளிக்கும்.

அல்லாஹ் நமக்களித்துள்ள மிகப் பெரிய மீடியாவான ஜும்ஆ மேடைகளில் அவ்வப்போது இதை நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

தலை முக்காட்டிற்கெதிராக பள்ளியில் மாணவிகள் ஏதும் பிரச்சனையை சந்தித்தால் அதை அலட்சியப்படுத்தாமல் பெற்றோர்கள், அல்லது பொறுப்புதாரிகள் உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

நமது அலட்சியப்போக்கே ஏராளமான உரிமைகளை இழந்து நிற்பதற்கு முக்கியக் காரணம் என்பதை முஸ்லிம்கள் அறிவார்ந்து சிந்தித்து உணர வேண்டும். இது நடந்தால் உரிமைகளை வென்றெடுக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

Sunday, August 4, 2013

வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸ் ஆய்வு - விளக்கம் - 2

வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸை நாம் அரபு மூலத்துடன் பதிவு செய்து அவர்களின மொழி பெயர்ப்பில் எழும் கேள்விகளை முதலில் வைத்தோம். அங்கிருந்து கிடைக்கப்பெறும் பதில்கள் சரிதானா.... என்பதை வாசகர்கள் முடிவு செய்துக் கொள்ளட்டும்.

இனி தொடர்ந்து அடுத்தடுத்தக் கேள்விகள்.

 
سنن ابن ماجه - كِتَاب الصِّيَامِ - فأمرهم رسول الله صلى الله عليه وسلم أن يفطروا وأن  يخرجوا إلى عيدهم من الغد حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ حَدَّثَنِي عُمُومَتِي مِنْ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا أُغْمِيَ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ فَأَصْبَحْنَا صِيَامًا فَجَاءَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ فَشَهِدُوا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ رَأَوْا الْهِلَالَ بِالْأَمْسِ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُفْطِرُوا وَأَنْ يَخْرُجُوا إِلَى عِيدِهِمْ مِنْ الْغَدِ


கேள்வி 3) வாகனக் கூட்டம் பிறைப் பார்த்து நோன்பு வைத்ததாகவும் மறு பிறைப் பார்த்தவுடன் என்னசெய்வதென்று தெரியாமல் சட்டம் கேட்பதற்காக நபி(ஸல்) அவர்களிடம் வந்ததாகவும் இவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறுகிறார்கள். பிறைப் பார்த்து நோன்பு வைக்க தெரிந்தவர்களுக்கு பிறைப்பார்த்து நோன்பை விட தெரியவில்லை என்ற குற்றச்சாட்டை இந்த மொழி பெயர்ப்பின் வழியாக வைத்துள்ளார்கள். பிறைப் பார்த்து நோன்பை வைக்க அவர்களுக்கு தெரிந்தது ஆனால் பிறைப் பார்த்து நோன்பை விடத் தெரியவில்லை என்பது சத்தியமான பார்வைத்தானா...என்பதை அவர்களே முடிவு செய்துக் கொள்ளட்டும். 

கேள்வி, வாகனக் கூட்டம் நோன்போடு வந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?

கேள்வி 4) அந்த ஹதீஸின் வாசகத்தில் ஒரு உண்மையுள்ளது. ஆனால் அது மொழி பெயர்ப்பில் மறைக்கப்பட்டுள்ளது. فَشَهِدُوا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ வந்தவர்கள் பிறைப் பார்த்ததாக சாட்சி சொல்கிறார்கள். ஆனால் மொழி பெயர்ப்பில் "சாட்சி" என்ற வார்த்தையை எடுத்து விட்டு பிறைப் பார்த்தோம் என்று மட்டும் மொழி பெயர்த்துள்ளனர். மார்க்க விளக்கம் பெற வந்தவர்கள்  "நாங்கள் பிறைப் பார்த்ததற்கு சாட்சி கூறுகிறோம்" என்று சாட்சியாளர்களாக ஆவார்களா..?

(நமது விளக்கம்: பிறைப் பார்த்து நோன்பு வைத்து பிறைப் பார்த்து நோன்பை விட்டு விட்டு வரும் வாகனக் கூட்டத்தார் மதீனாவில் நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் நோன்பு வைத்துள்ளதைப் பார்த்து பிறைப் பிறந்து ஷவ்வால் துவங்கி விட்டது. அதற்கு நாங்கள் சாட்சி, நாங்கள் பிறைப் பார்த்து விட்டோம் என்றே கூறுகிறார்கள். அதனால் தான் சாட்சி கூறுவதாக கூறுகிறார்கள்)

கேள்வி 5) பிறைப் பார்த்து நோன்பை விட வேண்டும் என்ற சட்டம் தெரியாதவர்களுக்கு பிறைப் பார்க்க வேண்டும் என்ற சட்டம் மட்டும் எப்படித் தெரிந்தது?


கேள்வி 6) வாகனக் கூட்டத்திற்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்றால், நாளை தொழும் திடலுக்கு செல்லுமாறு ஹதீஸ் வாசகம்.
வந்துள்ளது. நேற்று புறப்பட்டு இன்று மாலை மதீனா வந்து சேர்ந்தவர்கள் இன்று மாலை புறப்பட்டு நாளை காலை அவர்களின் தொழும் திடலுக்கு சென்று சேர்ந்து விட முடியுமா..?

கேள்வி 7) வாகனக் கூட்டத்தின் பயண தொலைவு கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக இருக்கும் போது நாளை தொழும் திடலுக்கு செல்லுங்கள் என்று அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தால் அது பொருத்தமான கட்டளையா...? நபி(ஸல்) அவர்களுக்கு இது விளங்கவில்லையா..?

கேள்வி 8) விடிந்தால் நபி(ஸல்) அவர்களுக்கு பெருநாள் எனும் போது, வந்தவர்களை தங்க வைத்து தம்மோடு தொழும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்காமல் நாளை மறுநாள் வாகனக் கூட்டத்தார் செல்லும் தொலைவுக்கு அவர்களை போக சொல்லி இருப்பார்களா..?

கேள்வி 9) பிறைப் பார்த்து நோன்பை விடத் தெரியாமல் சட்டம் கேட்க அவர்கள் வந்திருந்தால் பெருநாள் தொழுகையின் சட்டங்களை அவர்கள் எவ்வாறு விளங்கி இருப்பார்கள்? நபி(ஸல்) பெருநாள் தொழுகையின் சட்டங்களை விளக்காமல் அனுப்பி விட்டார்களா...? விளக்கி இருந்தால் அதற்கான ஆதாரம் எங்கே?

"வந்தவர்களுக்கு கட்டளையிட்டார்கள்" என்று இவர்கள் அந்த ஹதீஸுக்கு கொடுக்கும் மொழிபெயர்ப்பில் விடையே கிடைக்காத இத்தகைய கேள்விகள் அடங்கியுள்ளன.

வாசகர்களே... இந்தக் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான - அறிவுப்பூர்வமான பதில் கிடைக்கின்றதா... என்று கவனித்து வாருங்கள். அப்போதுதான் இப்னு அப்பாஸ் - குரைப் சம்பவத்தைப் போன்று இந்த ஹதீஸையும் தவறாக மொழி பெயர்த்து பரப்பி வருகிறார்கள் என்ற உண்மையான விபரம் உங்களுக்கு புரியும்.

இந்த ஹதீஸில் வரும் "ஃப அமரஹும்" என்பதை எப்படி மொழிபெயர்த்துப் புரிந்துக் கொள்வது? இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் நிலை என்னவென்பதை இனி பார்த்து விட்டு முஸ்லிமிலிருந்து அவர்கள் எடுத்துக் காட்டும் அடுத்த ஹதீஸின் விளக்கத்தைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸ் ஆய்வு - விளக்கம் - 2

வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸை நாம் அரபு மூலத்துடன் பதிவு செய்து அவர்களின மொழி பெயர்ப்பில் எழும் கேள்விகளை முதலில் வைத்தோம். அங்கிருந்து கிடைக்கப்பெறும் பதில்கள் சரிதானா.... என்பதை வாசகர்கள் முடிவு செய்துக் கொள்ளட்டும்.

இனி தொடர்ந்து அடுத்தடுத்தக் கேள்விகள்.

 
سنن ابن ماجه - كِتَاب الصِّيَامِ - فأمرهم رسول الله صلى الله عليه وسلم أن يفطروا وأن  يخرجوا إلى عيدهم من الغد حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ حَدَّثَنِي عُمُومَتِي مِنْ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا أُغْمِيَ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ فَأَصْبَحْنَا صِيَامًا فَجَاءَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ فَشَهِدُوا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ رَأَوْا الْهِلَالَ بِالْأَمْسِ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُفْطِرُوا وَأَنْ يَخْرُجُوا إِلَى عِيدِهِمْ مِنْ الْغَدِ


கேள்வி 3) வாகனக் கூட்டம் பிறைப் பார்த்து நோன்பு வைத்ததாகவும் மறு பிறைப் பார்த்தவுடன் என்னசெய்வதென்று தெரியாமல் சட்டம் கேட்பதற்காக நபி(ஸல்) அவர்களிடம் வந்ததாகவும் இவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறுகிறார்கள். பிறைப் பார்த்து நோன்பு வைக்க தெரிந்தவர்களுக்கு பிறைப்பார்த்து நோன்பை விட தெரியவில்லை என்ற குற்றச்சாட்டை இந்த மொழி பெயர்ப்பின் வழியாக வைத்துள்ளார்கள். பிறைப் பார்த்து நோன்பை வைக்க அவர்களுக்கு தெரிந்தது ஆனால் பிறைப் பார்த்து நோன்பை விடத் தெரியவில்லை என்பது சத்தியமான பார்வைத்தானா...என்பதை அவர்களே முடிவு செய்துக் கொள்ளட்டும். 

கேள்வி, வாகனக் கூட்டம் நோன்போடு வந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?

கேள்வி 4) அந்த ஹதீஸின் வாசகத்தில் ஒரு உண்மையுள்ளது. ஆனால் அது மொழி பெயர்ப்பில் மறைக்கப்பட்டுள்ளது. فَشَهِدُوا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ வந்தவர்கள் பிறைப் பார்த்ததாக சாட்சி சொல்கிறார்கள். ஆனால் மொழி பெயர்ப்பில் "சாட்சி" என்ற வார்த்தையை எடுத்து விட்டு பிறைப் பார்த்தோம் என்று மட்டும் மொழி பெயர்த்துள்ளனர். மார்க்க விளக்கம் பெற வந்தவர்கள்  "நாங்கள் பிறைப் பார்த்ததற்கு சாட்சி கூறுகிறோம்" என்று சாட்சியாளர்களாக ஆவார்களா..?

(நமது விளக்கம்: பிறைப் பார்த்து நோன்பு வைத்து பிறைப் பார்த்து நோன்பை விட்டு விட்டு வரும் வாகனக் கூட்டத்தார் மதீனாவில் நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் நோன்பு வைத்துள்ளதைப் பார்த்து பிறைப் பிறந்து ஷவ்வால் துவங்கி விட்டது. அதற்கு நாங்கள் சாட்சி, நாங்கள் பிறைப் பார்த்து விட்டோம் என்றே கூறுகிறார்கள். அதனால் தான் சாட்சி கூறுவதாக கூறுகிறார்கள்)

கேள்வி 5) பிறைப் பார்த்து நோன்பை விட வேண்டும் என்ற சட்டம் தெரியாதவர்களுக்கு பிறைப் பார்க்க வேண்டும் என்ற சட்டம் மட்டும் எப்படித் தெரிந்தது?


கேள்வி 6) வாகனக் கூட்டத்திற்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்றால், நாளை தொழும் திடலுக்கு செல்லுமாறு ஹதீஸ் வாசகம்.
வந்துள்ளது. நேற்று புறப்பட்டு இன்று மாலை மதீனா வந்து சேர்ந்தவர்கள் இன்று மாலை புறப்பட்டு நாளை காலை அவர்களின் தொழும் திடலுக்கு சென்று சேர்ந்து விட முடியுமா..?

கேள்வி 7) வாகனக் கூட்டத்தின் பயண தொலைவு கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக இருக்கும் போது நாளை தொழும் திடலுக்கு செல்லுங்கள் என்று அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தால் அது பொருத்தமான கட்டளையா...? நபி(ஸல்) அவர்களுக்கு இது விளங்கவில்லையா..?

கேள்வி 8) விடிந்தால் நபி(ஸல்) அவர்களுக்கு பெருநாள் எனும் போது, வந்தவர்களை தங்க வைத்து தம்மோடு தொழும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்காமல் நாளை மறுநாள் வாகனக் கூட்டத்தார் செல்லும் தொலைவுக்கு அவர்களை போக சொல்லி இருப்பார்களா..?

கேள்வி 9) பிறைப் பார்த்து நோன்பை விடத் தெரியாமல் சட்டம் கேட்க அவர்கள் வந்திருந்தால் பெருநாள் தொழுகையின் சட்டங்களை அவர்கள் எவ்வாறு விளங்கி இருப்பார்கள்? நபி(ஸல்) பெருநாள் தொழுகையின் சட்டங்களை விளக்காமல் அனுப்பி விட்டார்களா...? விளக்கி இருந்தால் அதற்கான ஆதாரம் எங்கே?

"வந்தவர்களுக்கு கட்டளையிட்டார்கள்" என்று இவர்கள் அந்த ஹதீஸுக்கு கொடுக்கும் மொழிபெயர்ப்பில் விடையே கிடைக்காத இத்தகைய கேள்விகள் அடங்கியுள்ளன.

வாசகர்களே... இந்தக் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான - அறிவுப்பூர்வமான பதில் கிடைக்கின்றதா... என்று கவனித்து வாருங்கள். அப்போதுதான் இப்னு அப்பாஸ் - குரைப் சம்பவத்தைப் போன்று இந்த ஹதீஸையும் தவறாக மொழி பெயர்த்து பரப்பி வருகிறார்கள் என்ற உண்மையான விபரம் உங்களுக்கு புரியும்.

இந்த ஹதீஸில் வரும் "ஃப அமரஹும்" என்பதை எப்படி மொழிபெயர்த்துப் புரிந்துக் கொள்வது? இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் நிலை என்னவென்பதை இனி பார்த்து விட்டு முஸ்லிமிலிருந்து அவர்கள் எடுத்துக் காட்டும் அடுத்த ஹதீஸின் விளக்கத்தைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

Monday, July 29, 2013

வாகனக் கூட்டம் பற்றி ஹதீஸ் ஆய்வு - தொடர் - 1

வாகனக் கூட்டம் ஹதீஸ்
1 - ஹதீஸின் கருத்தென்ன?
2 - இன்றைய புரிதல் என்ன?
3 - அறிவிப்பாளர்களின் நிலை என்ன?

அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்த்து நோன்பைத் துவங்க வேண்டும் என்போரின் பிரதான ஹதீஸ் ஆதாரங்கள் மூன்று. (இவைகள் அவர்கள் சரிகாண்போரின் மொழி பெயர்ப்பில் அவர்கள் அறிந்த ஹதீஸ்கள்)

1) பிறைப் பார்த்து நோன்பை வையுங்கள். பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள். பிறைத் தெரியாமல் மேக மூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக்கிக் கொள்ளுங்கள்.

2) வாகனக் கூட்டத்தின் ஹதீஸ் அடிப்படையில் அருகிலிருந்து வரும் தகவலையும் ஏற்கக் கூடாது.

3) குரைப் இப்னு அப்பாஸ்(ரலி) சம்பவத்திலிருந்து தூரத்திலிருந்து வரும் தகவலையும் ஏற்கக் கூடாது.

ஆக நேரடியாக பிறைப் பார்த்தே நோன்பைத் துவங்க வேண்டும்.

மனிதர்கள் என்ற முறையில் சிலவற்றையோ, பலவற்றையோ தவறாக விளங்க வாய்ப்புள்ளது என்பதால் இவர்கள் ஹதீஸ்களை தவறாக விளங்கியுள்ளார்கள் என்பது நமது கருத்து.

நாமும் கூட ஆரம்பத்தில் லோக்கள் பிறை, பிறகு சர்வதேசப் பிறை என்ற நிலையிலிருந்தோம். ஒன்றிற்கு பின் இன்னொன்றின் ஆதாரம் சரியாக இருந்ததால் நமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டோம். எங்காவது பிறையைப் பார்க்கத்தான் வேண்டும் என்ற சர்வதேசப் பிறை நிலைப்பாடும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மிக சரியான ஆதாரங்களால் முன் வைக்கப்படும் முடிவல்ல என்பதை தீவிர ஆய்வுக்குப் பிறகு தெளிவு கிடைத்ததால் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள கணக்கு அடிப்படையில் நாட்களை, மாதங்களை, வருடங்களை தீர்மானிப்பதே சரியான இஸ்லாமிய வழிமுறையாகும் என்ற கருத்துக்கு வந்துள்ளோம்.

நாள் காட்டி இல்லாத ஒரு வாழ்க்கை நெறியை ரப்புல் ஆலமீன் கொடுக்கவில்லை. உலக இயக்கத்திற்கு ஒரு நாள்காட்டி மிக மிக அவசியம் என்பதை குர்ஆன் தெளிவாக முன்வைத்துள்ளதால் யூத கிறிஸ்த்தவர்களால் முஸ்லிம்களிடமிருந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்ட சந்திர காலண்டரை மீண்டும் உலகம் - குறிப்பாக முஸ்லிம்கள் நடைமுறைக்கு கொண்டு வர மிகத் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்ற பேராவா கொண்டுள்ளோம்.

மாதம் என்பது 29 அல்லது 30 ல் முடியக் கூடிய விதத்தில் இறைவன் ஏற்படுத்தியுள்ள காலத்தை 30 ஆகவும் 31 ஆகவும் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் திட்டமிட்டு மாற்றி நடைமுறைப்படுத்தி அதில் உலகை ஐக்கியப்படுத்தி விட்டது.
காலத்தை விருப்பப்பட்ட மாதிரியெல்லாம் மாற்றிக் கொள்வது நம்மை குஃப்ரில் கொண்டு போய் விட்டு விடும் என்று திருக் குர்ஆன் வன்மையாக எச்சரித்திருக்கும் போது சந்திர காலண்டருக்கு எதிராக நாட்களை மாற்றி உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றது இஸ்லாத்திற்கு மாற்றமான சக்திகள். இந்நிலை மாறி அல்லாஹ்வின் நாள்காட்டி நடைமுறைக்கு வர வேண்டும் என்ற பேரார்வத்தில் சந்திர நாள்காட்டிக்கு எதிராக முஸ்லிம்களாலேயே எடுத்து வைக்கப்படும் - அதுவும் நபியின் பெயரால் எடுத்து வைக்கப்படும் - ஆதாரங்களை நடுநிலையுடன் அலசி பார்த்தால் அல்லாஹ்வின் ஏற்பாட்டிற்கு எதிரான ஒரு நிலையை நபி(ஸல்) கொண்டிருக்கவே முடியாது என்ற அசைக்க முடியாத - ஆணித்தரமான உண்மைக்கு நாம் வரலாம்.

எடுத்து வைக்கப்படும் ஆதாரங்கள் ஒன்று தவறாக விளங்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது ஆதாரங்களே தவறாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் குரைப் இப்னு அப்பாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆதாரத்தை அலசும் போது அதை விளங்குபவர்கள் தவறாக விளங்கியுள்ளார்கள் என்பதை உணர முடிந்தது. அதை நாம் இந்த பிறை கலந்துரையாடலில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
 வாகனக் கூட்டம் ஹதீஸ்

سنن ابن ماجه - كِتَاب الصِّيَامِ - فأمرهم رسول الله صلى الله عليه وسلم أن يفطروا وأن يخرجوا إلى عيدهم من الغد

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ حَدَّثَنِي عُمُومَتِي مِنْ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا أُغْمِيَ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ فَأَصْبَحْنَا صِيَامًا فَجَاءَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ فَشَهِدُوا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ رَأَوْا الْهِلَالَ بِالْأَمْسِ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُفْطِرُوا وَأَنْ يَخْرُجُوا إِلَى عِيدِهِمْ مِنْ الْغَدِ


இந்த ஹதீஸ் பல்வேறு நூட்களில் வந்துள்ளது. (அறிவிப்பாளர் தரம் குறித்து இறுதியில் அலசுவோம்)

இந்த ஹதீஸிற்கு வரும் தகவலை ஏற்கக் கூடாது என்று கூறுவோரின் மொழி பெயர்ப்பு கீழே:

///(மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.///)

அறிவிப்பவர்: அபூ உமைர்

நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீ, பைஹகீ, தாரகுத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான், அஹ்மத்

இந்த ஹதீஸில் "ஃப அமரஹும்" அவர்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்று வருவதால் வரும் தகவலை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவர்களை நோன்பை விடுமாறும், அவர்களின் பெருநாள் திடலுக்கு செல்லமாறும் அவர்களுக்குதான் நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். எனவே இது பொதுவான அறிவிப்பு அல்ல. வந்தவர்களுக்குரிய அறிவிப்பு.
இதுதான் அந்தந்தப் பகுதி பிறை என்போர் எடுத்து வைக்கும் வாதம்.

இதற்கு நமது விளக்கத்திற்கு செல்வதற்கு முன்னால், அவர்களின் மொழி பெயர்ப்பில் ஏராளமான கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.

முதலில் சில கேள்விகளை முன் வைக்கிறோம். இதற்கு அவர்களின் நேரடியான பதிலை எதிர்பார்க்கிறோம்.

1) ரமளானின் 29 நோன்புகளை முடித்து 30ம் நாள் பிறைப் பார்த்த ஒருவர் வெளிநாட்டிலிருந்து (உதாரணமாக சவுதியிலிருந்து) அன்றிரவே தமிழகம் வந்து சேருகிறார். "நான் பிறைப் பார்த்து விட்டு வருகிறேன்" என்கிறார். நீங்கள் அவருக்கு கொடுக்கும் ஃபத்வா என்ன? நீ எங்கு பிறைப் பார்த்தாயோ அங்கு சென்று பெருநாள் தொழு.. ஓடு... என்று சொல்வீர்களா..?

கர்நாடகத்திலிருந்தோ, கேரளாவிலிருந்தோ பிறைப் பார்த்த ஒருவர் சென்றை வருகிறார். பிறை பார்த்தேன் என்கிறார். இது நமக்குரியதல்ல ஓடு உன்னிடத்தில் சென்று பெருநாள் தொழு என்பீர்களா
" எந்த ஒரு ஆத்மாவையும் சக்தியை தாண்டி நிர்பந்திக்க மாட்டான்..." என்ற வசனத்தை எடுத்துக் காட்டி சவுதியிலிருந்து வந்தவர் தமிழகத்தில் தொழலாம் என்று பதிலளிக்காதீர்கள். இந்த வசனத்தை எடுத்துக் காட்டி வாகனக் கூட்டத்தை நபி(ஸல்) தடுத்து நிறுத்தவில்லை. (அதாவது வாகனக் கூட்டத்திற்கு அறிவித்தார்கள் என்று உங்கள் விளக்கப்படி
Sajidur Rahman Sajid இந்த ஹதீஸிர்க்கு நீங்கள் என்ன விளக்கம் கொடுக்க வருகிறீா்கள்.
அன்புச் சகோதரர் சாஜிதுர்ரஹ்மான், உங்கள் புரிதலில் நாம் கேள்விகள் வைக்க காரணம் அந்த - அத்தகைய ஹதீஸ்களுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் உங்களாலேயே மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

நடைமுறை சாத்தியமற்ற எது ஒன்றையும் இஸ்லாம் சட்டமாக முன்வைக்கவில்லை. சில சட்டங்கள் ஆரம்பத்தில் சற்று சாத்தியக்குறைவாக இருக்கலாம். பிறகு அது சரியாகி விடும். சாத்தியமே இல்லாத சட்டங்கள் இஸ்லாத்தில் இல்லை.

நாம் வைத்துள்ள கேள்விகளையும், இனி வைக்கப்போகும் கேள்விகளையும் நீங்கள் நடுநிலையோடு அணுகினால் அந்த ஹதீஸிற்கு உங்கள் தரப்பில் கொடுக்கப்படும் விளக்கம் தவறென்று உணர்வீர்கள்.

நாம் கலந்தாய்வு செய்கிறோம். பிடிவாத போக்கு நம்மிடம் இருக்காது அல்லாஹ் காப்பாற்றட்டும். நாம் விளங்கியுள்ள ஒன்றிற்கு மாற்றமாக கருத்து ஆதாரங்களுக்கு நெருக்கமாக இருப்பின் அதை ஏற்பதே சிறந்ததாகும்.

கேள்விகளை மீளாய்வு செய்யுங்கள்.
Abu Bakr As-Siddiq ///1) ரமளானின் 29 நோன்புகளை முடித்து 30ம் நாள் பிறைப் பார்த்த ஒருவர் வெளிநாட்டிலிருந்து (உதாரணமாக சவுதியிலிருந்து) அன்றிரவே தமிழகம் வந்து சேருகிறார். "நான் பிறைப் பார்த்து விட்டு வருகிறேன்" என்கிறார். நீங்கள் அவருக்கு கொடுக்கும் ஃபத்வா என்ன? நீ எங்கு பிறைப் பார்த்தாயோ அங்கு சென்று பெருநாள் தொழு.. ஓடு... என்று சொல்வீர்களா..?

கர்நாடகத்திலிருந்தோ, கேரளாவிலிருந்தோ பிறைப் பார்த்த ஒருவர் சென்றை வருகிறார். பிறை பார்த்தேன் என்கிறார். இது நமக்குரியதல்ல ஓடு உன்னிடத்தில் சென்று பெருநாள் தொழு என்பீர்களா...?///

இரண்டு கேள்விகள் கேட்டுலீர்கள்

அதற்கான பதில்கள்

1.ஒருவர் சுபுஹ் தொழுகை தொழுத பின் விமானத்தில் ஒரு தேசத்திற்கு செல்கிறார் அங்கு அப்போ தான் சுபுஹ் நேரம் வருகிறது அவருக்கு அங்கு சுபுஹ் கடமை இல்லை அடுத்த தொழுகையை அவர் தொழுதால் போதும்.

அது போல் தான் ஒருவர் வருகிறார் அவருக்கு ஒரு நோன்பு கூட இருந்தால் 30 நிறைவு செய்து விட்டு அந்த பகுதியுடன் தான் அவர் பெருநாள் கொண்டாட வேண்டும்.

2.கர்நாடகத்தில் இருந்தோ கேரளதிலில் இருந்தோ ஒருவர் வந்தால் இங்கு பெருநாள் இல்லை நபியின் சுன்னாஹ்வை தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று சொல்ல வேண்டும் !

"நீ விரும்பினால் நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போய் பெருநாள் கொண்டாடிகோல் அல்லது எங்கள் பகுதிக்கு என்று பெருநாளோ அன்று இணைந்துகொள்!" என்று பதில் கூறுவோம்

இவாறு தான் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் காட்டி தந்தார்கள் !

காட்டி தந்த ஹதீஸ்களை மீண்டும் காட்டினாள் வேறு விளக்கம் கொடுப்பீர்கள் .

Gn Voice ஸலாம்.
சமாளிப்பும் சுயகருத்தும் இப்போது எங்கிருந்து வருகின்றது என்று வாசகர்கள் புரிந்து வருவார்கள் சகோ. அபூபக்கர்.

உங்கள் பதிலில் உள்ள தவறுகளைப் பாருங்கள்

முதல் தவறு) சுப்ஹ் தொழுகையெல்லாம் பொருத்தமே இல்லாத விளக்கம். ஏனென்றால் "உனக்கு சுப்ஹுக்குரிய இடத்திற்கு ஓடு" என்றெல்லாம் யாரையும் சொல்லவில்லை. ஆனால் உங்கள் புரிதல்படி பிறைப்பார்த்தவர்களை அவர்களிடத்திற்கு செல்ல நபி(ஸல்) சொன்னார்கள் என்பதற்கு நீங்களே ஹதீஸை காட்டுகிறீர்கள்.

இரண்டாம் தவறு) ////அது போல் தான் ஒருவர் வருகிறார் அவருக்கு ஒரு நோன்பு கூட இருந்தால் 30 நிறைவு செய்து விட்டு அந்த பகுதியுடன் தான் அவர் பெருநாள் கொண்டாட வேண்டும்./////

அதெப்படி, பிறைப் பார்த்துவிட்டு மாதத்தை முடித்து விட்டு பெருநாள் தினத்தில் வருபவருக்கு உனக்கு பெருநாள் இல்லை. நோன்பு வை என்று சொல்வீர்களா..? இதற்கு என்ன ஆதாரம்? ஏன் மீண்டும் அவரை சவுதி திரும்ப சென்று பெருநாள் கொண்டாட சொல்ல தடையுள்ளதா? அவருக்கான பெருநாளை அலட்சியப்படுத்தி நோன்பு வைக்க சொல்வது நியாயமான வழிமுறைதானா..?

மூன்றாம் தவறு) ///2.கர்நாடகத்தில் இருந்தோ கேரளதிலில் இருந்தோ ஒருவர் வந்தால் இங்கு பெருநாள் இல்லை நபியின் சுன்னாஹ்வை தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று சொல்ல வேண்டும் !

"நீ விரும்பினால் நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போய் பெருநாள் கொண்டாடிகோல் அல்லது எங்கள் பகுதிக்கு என்று பெருநாளோ அன்று இணைந்துகொள்!" என்று பதில் கூறுவோம் ///

நீ விரும்பினால் எங்களோடு பெருநாள் கொண்டாடு, விரும்பினால் உன் இடத்திற்கு போ... என்று நபி(ஸல்) சொல்லவில்லையே... (அதாவது உங்கள் ஹதீஸ் புரிதலின்படி)

"திரும்பி போ" என்று நபி(ஸல்) கட்டளையிட்டதாகத்தானே.. சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு உங்கள் ஹதீஸ் விளக்கம் தவறு என்று சுட்டிக் காட்டி விளக்கம் கேட்டவுடன் இந்த "விரும்பினாலை" உள்ளே நுழைத்து புது விளக்கம் கொடுக்கிறீர்கள்.

எப்படியாவது சமாளிப்போம் - நாங்கள் விளங்கியது தவறு என்று மட்டும் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்பது போலத்தான் இருக்கின்றது உங்கள் விளக்கம்.   (அடுத்தத் தொடர் பார்க்கவும்)
 

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks