Sunday, June 23, 2013
பிறை - 10 கேள்விகள் பதில் கிடைக்குமா..?
1. இறைத்தூதர்(ஸல்) தம்முடைய வாழ்நாளில் என்றாவது ரமழான் அல்லது பெருநாள் பிறையை தம் புறக்கண்ணால் பார்த்து அறிவித்தார்களா? யாரேனும் பிறையை பார்த்தால் அதை என்னிடம் வந்து அறிவித்தே ஆகவேண்டும் என என்றாவது கூறினார்களா? இதற்காக டவுண்காஜிகளையோ, பிறைக் கமிட்டியினரையோ நியமித்தார்களா?
2. எந்தத் திசையில், எந்த வேளையில், எந்தெந்த நாள்களில் பிறையை பார்க்க நபி(ஸல்) நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்? பிறைகளின் படித்தரங்கள் குறித்து (10:5, 36:39) அல்லாஹ்வின் அறிவுப்புகளை, கட்டளைகளை அவர்கள் எப்படி புரிந்து நடைமுறைப் படுத்தினார்கள்?
3. வளர்பிறை, தேய்பிறை, முழுநிலவு, சந்திரன் மறைக்கபடும் நாள் என அனைத்தையும் நபி(ஸல்) புறக்கண்ணால் பார்த்து வந்தார்களா? அவர்கள் தினமும் பிறையை அவதானித்தார்களா அல்லது மாதத்தின் 29வது நாள் மட்டும்தான் பிறையைப் பார்த்தார்களா? இதற்கான ஆதாரம் எங்கே?
4. ஷஅபான் 29 மற்றும் ரமழான் 29 தினங்கள் என்று நினைத்துக் கொண்டு அன்று மக்ரிபு வேளையில் மேற்கு திசையை நோக்கி நின்று கொண்டு பிறையைப் பார்ப்பதை கற்றுக் கொடுத்தது யார்? அன்று 29வது நாள்தான் என்ற முடிவிற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? மாதத்தின் 28, 27, 26 போன்ற நாள்களிலும் பிறை மேற்கு திசையில் மக்ரிபு வேளையில்தான் தெரிகிறதா?
5. ஸூமூ லி ருஃயத்திஹி பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என மேடையில் முழங்கும் எந்த ஆலிமும் பிறையை தம் புறக்கண்ணால் பார்த்துவருவதில்லை என்பதை எங்களால் அடித்துக் கூறமுடியும். இத்தகையோரின் தவறான பிரச்சாரத்தினால்தான் மூன்று வெவ்வேறான நாள்களில் பெருநாள் உட்பட முஸ்லிம்களுக்கு ஒரு கிழமைக்கு 3 தேதிகள் மற்றும் மூன்று கிழமைக்கு ஒரு தேதியும் வருகிறது. இவ்வாறுதான் குர்ஆன் சுன்னா போதிக்கிறதா? மூன்று தேதிகள் ஒரு கிழமைக்கு என நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்த முறைக்கு ஆதாரம்தான் என்ன? தலைப்பிறையை சரியாக கணக்கிடாமல் அல்லது பிறையைப் பார்க்காமல் நீங்கள் இருந்துவிட்டால் சம்பந்தப்பட்ட அந்த மாதம் துவங்காமல் போய்விடுமா என்ன? சற்றே சிந்தியுங்கள்!
6. உங்கள் கருத்துப்படியே பிறையை புறக்கண்ணால் பார்த்துதான் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் அவ்வாறுதான் பெருநாள் தொழுகை தொழவேண்டும் என்றால், ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும் துருவப்பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலைதான் என்ன? ஆறு மாத பகல்காலங்களில் ரமழான் மாதம் வரும் பட்சத்தில் அவர்கள் அந்த ஆறு மாதங்களும் பட்டினி கிடக்கவேண்டுமா? அல்லது அந்த ரமழான் முழுவதும் பிறை கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அம்மக்களுக்கு நோன்பே கடமையில்லையா? பக்கத்து நாடுகளை வைத்து கணக்கிட்டுக் கொள்ளலாம்; இதற்கு தஜ்ஜால் வரும் காலத்தில் நிகழும் நாள்களைப் போல கணக்கிட்டுக் கொள்ளலாம்; இதற்கு ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது என நழுவாமல் பிறையை புறக்கண்ணால் பார்க்கவேண்டும் என்ற உங்கள் சட்டவிதியின் அடிப்படையில் பதில் தாருங்கள்!
7. ஒரு வருடத்தின் 12 மாதங்களில் ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் மாதங்களில் மட்டுமே பிறையை தேடி அலையும் படலத்தை நடத்துகிறீர்களே; ஏனைய 9 மாதங்களிலும் பிறையை ஒருபொருட்டாகவே நீங்கள் கருதுவதில்லை அல்லது கலண்டரைத்தான் பின்பற்றுகிறீர்கள்; இவ்வாறுதான் நபி(ஸல்) ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே பார்த்தார்களா? அல்லது ஒவ்வொரு மாதமும் பிறையை புறக்கண்ணால் பார்த்தார்களா? இதில் மார்க்கம் நமக்கு கற்றுத் தருவது என்ன?
8. விஞ்ஞானத்தின் துணைகொண்டு துள்ளிய கணக்கீட்டின் அடிப்படையில் பிறை தெரியாத கும்மா உடைய நாள், தலைப்பிறை போன்றவற்றை அறிவிக்கும்போது நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைக்கூட விளங்க முற்படாமல், நபி(ஸல்) பிறையை கண்ணால்தான் பார்க்க சொன்னார்கள் என்று தவறாக கூறி அறிவியலை அலட்சியப் படுத்துகிறீர்களே, தலைப்பிறையை ஒருவர் இரவு 10 மணிக்கு பார்த்ததாகவோ, நன்பகல் வேளையிலேயே பார்த்ததாகவோ அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது அதை மறுப்பீர்களா? விஞ்ஞானத்தின் துணையின்றி அப்பிறை அறிவிப்பை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்? அல்லது எப்படி மறுப்பீர்கள்?
9. தலைப்பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதாக வரும் தகவலை மாநில, தேசிய அல்லது சர்வதேச எல்லைக் கோட்டை வைத்து வரையறுக்க ஆதாரம் என்ன? அத்தகைய எல்லை கோட்டிற்கு மார்க்கம் தரும் முக்கியத்துவம்தான் என்ன? அவ்வாறு மாநில, தேசிய அல்லது சர்வதேசத் தகவலை வைத்து ரமழான் அல்லது பெருநாள் என்று அறிவிப்பு வெளியிடுபவர்கள் சாட்சி விஷயத்தில் நபி(ஸல்) நடைமுறைபடுத்திய இறை நம்பிக்கையாளர்களின் இரண்டு சாட்சிகளை முன்னிறுத்திதான் அறிவிக்கிறீர்களா? அல்லது இனம்காணாத நபர்களின் அறிவிப்புகளை ஏற்றுக்கொண்டு அறிவிக்கிறீர்களா? அப்பிறை அறிவிப்புக்கு சாட்சியளித்தவர்கள் குறித்து முறையாக அறிவிப்பு ஏன் செய்யப்படுவதில்லை? அவர்களின் சாட்சியத்தை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையிலேயே அக்கரை எடுக்கிறார்களா?
10. பிறையை புறக்கண்ணால் பார்த்துதான் ரமழான் மாதத்தைத் துவங்குவோம் என்று மார்தட்டுபவர்களே! உங்கள் இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொரு மாதத்திற்கும் முன்கூட்டியே காலண்டர் அச்சிட்டு வினியோகம் செய்வது ஏன்? இதுமட்டும் நபி வழிக்கு முரணாக இல்லையா
Labels:
10 கேள்விகள்,
பிறை,
ரமளான்
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

No comments:
Post a Comment